Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் சி பி கே கன்னையா தெருவில் அமைந்துள்ள கௌரவ பலிஜா நாயுடு சமூகத்தின் சார்பில் 30 ஆண்டுகளாக அரசமரத்து செல்வ விநாயகர் சாமிக்கு பல்வேறு முக்கிய விசேஷ தினங்களும், மற்றும் விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீசெல்வ விநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் யான பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகருக்கு பிடித்த பல்வேறு வகையான கொழுக்கட்டைகள், பழங்கள், மற்றும் சர்க்கரைப் பொங்கல், புளி சாதம் உள்ளிட்ட பிரசாதங்கள் படைக்கப்பட்டு இப்பகுதியைச் சேர்ந்த அனைவரும் விநாயகரை வணங்கினர்.
தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.